சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசின் தேசிய வள அமைப்பான (National Resource organization) அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பட்டு நிறுவனத்தின் சார்பாக திட்ட அலுவலர் முனைவர் எஸ்ஜெய்சங்கர் சர்வதேச சிறு குறு நடுத்தர தொழில் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பணவீக்கம், கொள்கை மாற்றங்கள் , உலகளாவிய பொருளாதார சீர்குலைவுகள், பருவநிலை மாற்றங்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டு , இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் புதுமை மற்றும் மீள்தன்மையை வளர்ப்பதில் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்களின் பங்கை நினைவு கூர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ( ஜூன்27 ) இந்த நாள் சிறப்பிக்க படுகிறது.
இந்திய தொழில் முனைவோர் மேம்பட்டு நிறுவனம் வழங்கக்கூடிய பல்வேறு பயிற்சிகளையும் , ஆலோசனைகளையும் சிறு குறு நடுத்தர நிறுவன வளர்சிக்கு பயன் படுத்தி கொள்ளுமாறு திட்ட அலுவலர் முனைவர் எஸ்.ஜெய்சங்கர் கேட்டு கொண்டுள்ளார் .
இந்திய தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் எஸ்.ஜெய்சங்கர் சர்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் தின வாழ்த்து
RELATED ARTICLES