Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்வெண்ணந்தூர் அருகே 60 ஆடி ஆழ கிணற்றில் விழுந்த இன்ஸ்பெக்டரை காப்பாற்றிய விவசாயிகள்

வெண்ணந்தூர் அருகே 60 ஆடி ஆழ கிணற்றில் விழுந்த இன்ஸ்பெக்டரை காப்பாற்றிய விவசாயிகள்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டி பகுதியில் பிரதான சாலையில் இருந்து 15 அடி தள்ளியுள்ள 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் கே.சுகவனம் விழுந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் அவரை மீட்டு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் கே.சுகவனம் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் கிணற்றில் விழுந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கே.சுகவனம், இவர் ராசிபுரம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும் உள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அக்கரைப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற இவர் மணிமுத்தாறு மேம்பாலம் அருகேயுள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. கிணற்றில் விழுந்த ஆய்வாளரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். குற்றச்சம்பங்களை குறைக்க பல பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துதல், இரவு ரோந்து பணியில் காவலர்களை முழுமையாக பணியில் ஈடுபடுத்துதல், போன்றவற்றில் தீவிரமாக பணியாற்றினார். சககாவலர்களிடம் பணியில் கடுமையாக நடந்து கொள்வது இவரது சுபாவமாக இருந்துள்ளது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இருதய பிரச்சனை ஏற்பட்டு இவர் இருதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் இரு மாதங்கள் விடுமுறைக்கு பின் பணிக்கு திரும்பிய இவர், சிகிச்சைக்கு பின் மனம் தளர்ந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கரைப்பட்டிக்கு காவல் உடையுடன் ஜீப்பில் சென்ற இவர், மணிமுத்தாறை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்து கிணற்றை நோக்கி நடந்து சென்ற நிலையில் விழுந்துள்ளார். பிரதான சாலையில் இருந்து 15 அடி தொலைவில் உள்ள கிணற்றை நோக்கி நடந்து சென்ற இவர் சுமார் 60 அடி ஆழத்திற்கு நீர் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார். பின்னர் இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த காவல்துறை ஜீப் ஒட்டுநரும், விவசாயிகள் சிலரும் பதறியடைத்து காப்பாற்றினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் விழுந்த அவருக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் கே.சுகவனம் கிணற்றில் தடுமாறி தவறி விழுந்தாரா ?அல்லது பணி சுமை காரணமா? இருதய மருத்துவ சிகிச்சையால் மன உடைந்த இருந்த நிலையில் மயங்கியது காரணமா என காவல் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயரதிகாரிகளுக்கே வெளிச்சம்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!