ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலின் சித்திரை தேர்திருவிழா மண்டப கட்டளைதாரர்களின் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

ராசிபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவிதி உலா நடந்து வருகிறது. அந்த வகையில் ஆயிர வைசியர் சமுகத்தின் சார்பில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயிலிருந்து புறப்பட்டது. இதில் பழைய பேருந்து நிலையம், தேரடி வீதி, பெரிய கடைவீதி, கச்சேரி வீதி வழியாக பக்தர்களுக்கு சுவாமி ஊர்வலமாக வந்து அருள் பாலித்தார்.
இதில் ராசிபுரம் ஆயிர வைசியர் சமுகத்தின் தலைவர் கே.கே.வி. கிருஷ்ணமூர்த்தி, ராஜமாணிக்கம், ஆயிர வைசிய மாவட்ட துணைத் தலைவர் முருகேசன், பாலசுப்பிரமணி, செல்வம், சிவக்குமார், ஏடிசி ரவிக்குமார், என். பாலசுப்பிரமணியம், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.