நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ கற்பூர நாராயண பெருமாள் கோவிலில் ராமானுஜரின் 1008 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைமற்றும் திருவீதி உலா நடைபெற்றது இதில் சுற்று வட்டார பகுதியில் சார்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜர் அருள் பெற்று சென்றனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்து அடுத்த சிங்களாந்தபுரத்தில் 1000 ம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமீத கற்பூர நாராயண பெருமாள் கோவில் உள்ளது இக்கோவிலில் ஏகாதேசி , சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம் .மேலும் இக்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமானுஜருக்கு ஆண்டுதோறும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜரின் 1,008 ஆவது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ராமானுஜருக்கு தயிர் இளநீர் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அருள் பாலித்தார், அப்போது திவ்யபிரபத்தை பக்தர்கள் பாடினர் அவனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ ராமானுஜர் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமானுஜர் அருளை பெற்று சென்றனர்