Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்ராசிபுரம் பகுதியில் ரூ.13.56 கோடி மதிப்பில் 51 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் : அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி...

ராசிபுரம் பகுதியில் ரூ.13.56 கோடி மதிப்பில் 51 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் : அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைப்பு

ராசிபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர், அத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற புதிய பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை திறந்து வைத்தார்.

அணைப்பாளையம் ஊராட்சியில் ரூ.38.36 லட்சம் மதிப்பில் 8 புதிய வளர்ச்சி திட்ட பணிகள், போடிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.39.36 லட்சம் மதிப்பில் 16 புதிய வளர்ச்சி திட்ட பணிகள், மோளப்பாளையம் ஊராட்சியில் ரூ.40.47 லட்சம் மதிப்பில் 8 புதிய வளர்ச்சி திட்ட பணிகள் என‌ மொத்தம் ரூ.1.18 கோடி மதிப்பில் 32 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், தலா ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.புதுப்பாளையம் ஊராட்சி, சானார்புதூர், கட்டனாச்சம்பட்டி ஊராட்சி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக கடைகளை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக பொருட்களை வழங்கினார். மேலும், இரா.புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு பணி கூடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் இரா.புதுப்பாளையம் ஊராட்சி, எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம் என மொத்தம் ரூ.46.30 லட்சம் மதிப்பீட்டில் 5 முடிவுற்ற திட்டப்பணிகளையும், வெண்ணந்தூர் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழல் கூடம், கழிப்பிடம், பூங்கா ஆகிய 5 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.81 லட்சம் மதிப்பிலும் அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.36.39 லட்சம் மதிப்பீட்டில் பல்லவநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுதல், சாலை அமைத்தல் ஆகிய 3 பணிகள், பொன்பரப்பிப்பட்டி ஊராட்சியில் ரூ.37.54 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சாலை அமைத்தல், கதிர் அடிக்கும் களம் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல் ஆகிய 5 பணிகள், நடுப்பட்டி ஊராட்சியில் ரூ.36.90 லட்சம் மதிப்பில் சாலை அமைத்தல், பொது விநியோக கடை கட்டுதல், தெரு விளக்கு அமைத்தல் ஆகிய 5 பணிகள், தொட்டியப்பட்டி ஊராட்சியில் ரூ.36.13 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல் ஆகிய 5 பணிகள் என மொத்தம் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் 18 புதிய திட்டப்பணிகளுக்கும், ரூ.10.91 கோடி மதிப்பீட்டில் அத்தனூர் பேரூராட்சி மற்றும் வெண்ணந்தூர் பேரூராட்சிக்கான ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு கழிவு மேலாண்மை வசதிகள் அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரூ.13.56 கோடி மதிப்பீட்டில் 51 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் 10 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அட்மா குழுத்தலைவர்கள் கே.பி.ஜெகநாதன் (ராசிபுரம்), ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்), பேரூராட்சி தலைவர்கள் ராஜேஷ் (ராசிபுரம்), சின்னசாமி (அத்தனூர்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, உதவி இயக்குநர் பேரூராட்சி குருராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!