நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ராசிபுரத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மு.கார்த்திக் ஏற்பாட்டில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய நீதிமன்றம் அருகே நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் ஆனது அமைக்கப்பட்டது.இதில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொது மக்களுக்கு நபர் ஒருவருக்கு தர்பூசணி, வெள்ளரி,முலாம்பழம், இளநீர் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.
உடன் நகர திமுக செயலாளர் என்.ஆர். சங்கர், நகர் மன்ற தலைவர் ஆர். கவிதா சங்கர்மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் கார்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் யோகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.