ராசிபுரம் அருகே நீச்சல் பயிற்சி மேற்கொண்ட 8-ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்பவரது மகன் நவீன் குமார் (13) இவர் ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயன்று வந்தார். இந்த நிலையில் மாணவர் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள தனியார் கிணற்றில் நண்பர்களுடன் கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டாராம். அப்போது மாணவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வந்து மாணவரை சடலமாக மீட்டனர். இது குறித்து ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.