ராசிபுரம் தமிழ் கழகத்தின் சார்பாக இன்று (23.4.25) ராசிபுரத்தில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது . இதில் தமிழ் கழகத்தின் தலைவர் பி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

இதில் கல்வி துறையின் பள்ளி துணை ஆய்வாளர் முனைவர் கை. பெரியசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தின் வலிமை குறித்தும், புத்தகத்தின் மதிப்பு குறித்தும், புத்தகத்தின் மேன்மை குறித்தும், புத்தகம் படிப்பதன் அவசியம் குறித்தும், புத்தகம் என்ன செய்யும் என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில்கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
வாசிப்பை நேசிப்போம், வாசிப்பை சுவாசிப்போம், புத்தகம் படிப்போம், புதிய எழுச்சி பெறுவோம்,
புதிய புறநானூறு படைப்போம் என்ற முழக்கத்தோடு உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.