ராசிபுரம் நகரப் பகுதி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நகராட்சிப் பகுதிக்கு நீராதாரமான காவிரி கீழ் மேட்டூர் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் கிணற்றுக்கு வரும் நீர் அளவு குறைந்துள்ளது. எனவே மின் மோட்டார் இயக்கமுடியவில்லை என தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே குடிநீர் தேவைக்கு மட்டும் நீரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சூ.கணேசன் தெரிவித்துள்ளார்.