வெண்ணந்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றியம், மூலக்காடு ஊராட்சி அதிமுக இளம்பெண் பாசறை செயலாளர் ஆர்.சுகந்தி, தேமுதிக கிளை செயலாளர் வி.சின்னதுரை ஆகியோர் தலைமையில் அதிமுக, தேமுதிக கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேஆர்என்.ராஜேஸ்குமார் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
ராசிபுரத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் ஒன்றியத் திமுக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மதிவாணன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மு.கருணாநிதி,கிளை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், கணபதி, கிளை பிரதிநிதி வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.