நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் இரயிலில் அடிப்பட்டு தற்கொலை? இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் ஆண், பெண் இருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் போலீசார் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிந்தவர்கள் சுப்பிரமணியன் (55) பிரமிளா(51) என்பதும் இருவரும் கணவன்,மனைவி என தெரியவந்தது மேலும் சுப்பிரமணியன் திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்ததும், பிரமிளா நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த தம்பதியினர் இருவரும் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள கலைவாணி நகரில் வசித்து வந்துள்ளனர் மேலும் இவர்களுக்கு சன்யுத்தா (25), மகன் ஆதித்தியா (21) உள்ளனர். தம்பதியினர் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலையில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் கடன் பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினை காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் வட்டாரபோக்குவரத்து அலுவலர் தனது மனைவியுடன் இரயில் அடிப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.