நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பாக சந்தோஷ பொங்கல் விழா பாசம் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் பாசம் அறக்கட்டளை குமார் தலைமையில் நடைபெற்றது.
இல்லத்தில் பொங்கல் வைக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தளிர்விடும் பாரதம் பிரபு, பழனிச்சாமி, மாணிக்கவேல், மோகன்ராஜ், தனசேகரன், மகேந்திரன், தமிழ்செல்வி, சரண்யா, உமா, ஜனனி, சமூக சேவகி சித்ராபாபு ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் சித்தோடு கார்த்திகேயன் சார்பில் மூன்று ஊன்றுகோல் வழங்கப்பட்டது.
நிறைவாக பாசம் இல்ல நிர்வாகி தீபா அனைவருக்கும் நன்றி கூறினார்.