ராசிபுரம் அருகேயுள்ள பழந்திண்ணிப்பட்டி தச்சங்காடு பகுதியில் வீட்டில் கட்டி வைத்திருந்த நாய்க்கு விஷமருந்து கலந்த சிக்கன் துண்டு கொடுத்ததால் உயிரிழப்பு எனப் புகார். முன்விரோதம் காரணமாக யாராவது விஷம் கலந்து கொடுத்தனரா அல்லது நாய் இடையூறாக இருப்பதாக கருதியதால் விஷம் கொடுக்கப்பட்டதா என போலீஸார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழந்தணிப்பட்டி அருகே தச்சங்காடு பகுதி உள்ளது. இப்பகுதியில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் தனக்கு சொந்தமான 3 வயது நாயை வீட்டின் முன்பு கட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், வீட்டுக்கு முன்பு கட்டி இருந்த நாயைச் சுற்றிலும் குருணை மருந்து கலந்த சில்லி சிக்கனை உணவாக போட்டுள்ளனர். இதனை சாப்பிட்ட வளர்ப்பு நாய் இறந்துள்ளது.
அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான இரண்டு பூனைகளும் குருணை விஷமருந்து கலந்த சில்லி சிக்கனை சாப்பிட்டு உயிரிழந்தது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகார் செய்தனர். இச்சம்வம் குறித்து வெண்ணந்தூர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய், பூனைக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.