Tuesday, July 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் - குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஒருவார கால அறிமுக பயிற்சி திட்டம்...

ராசிபுரம் – குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஒருவார கால அறிமுக பயிற்சி திட்டம் தொடக்கம்

தமிழக உயர் கல்வித்துறை வழிகாட்டுதல்படி ராசிபுரம்-குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கு ஒருவார கால பயிற்சி முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஒரு வார பயிற்சி திட்டத்திற்கு தமிழக அரசின் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்தும் கல்லூரியில் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்தும் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக கல்லூரியில் இருக்கும் விளையாட்டு வசதிகள், என்சிசி, என்எஸ்எஸ், ஒய்ஆர்சி போன்ற பல்வேறு அமைப்புகள் குறித்தும் மனித உரிமைகள், பொது சுகாதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்தும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து இந்த ஒரு வாரகால பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.

ராசிபுரம்:1

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இக்கல்வியாண்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான அறிமுக ஒருவாரகால பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா.சிவக்குமார் தலைமை வகித்துப் பேசினார்.

இயற்பியல் துறை தலைவர் எம் கே சுப்பிரமணியம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் குறித்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆர்.ஐஸ்வரியா பேசினார். கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் சி.நாகூர்செல்வம் கல்லூரியில் உள்ள பல்வேறு பாடப் பிரிவுகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரியின் தரம் போன்றவை குறித்தும் பேசினார். ஆங்கில துறைத் தலைவர் பெ.மைதிலி, வேதியியல் துறை தலைவர் பி.சண்முகசுந்தரம், கணினி அறிவியல் துறை தலைவர் சுரேஷ்பாபு, தாவரவியல் துறை தலைவர் செங்கோட்டுவேல், விலங்கியல் துறைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்களும் தங்கள் துறை பற்றி உரை நிகழ்த்தினர்.
இறுதியில் பொது நிர்வாக துறை தலைவர் பா.குருசாமி நன்றி கூறினார்.

குமாரபாளையம்:

இதே போல் குமாரபாளையம் அரசு கலை, அறிவயல் கல்லூரியில் ஒரு வார அறிமுக பயிற்சி திட்ட ஆலோசனை முகாம் முதல்வர் சரவணாதேவி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ரகுபதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் காவல்துறை ஆய்வாளர் தவமணி பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது:

தமிழக அரசு சார்பில், அரசு கல்லூரிகளுக்கு, மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி, கல்வி பயில ஊக்குவித்து வருகின்றனர். மாணவ, மாணவியர் இதனை பயன்படுத்தி நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். விசைத்தறி தொழில் மிகுந்த குமாரபாளையம் நகரில், விசைத்தறி மற்றும் இதர தொழில் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்லூரி கல்வி பயில, இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை, கல்வி போதிக்கும் ஆசிரிய பெருமக்களை மதிக்க வேண்டும், அப்படிப்பட்ட மாணவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள். எடுத்துக்கொண்ட குறிக்கோளில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். லட்சியத்துடன் வாழ வேண்டும் எனப் பேசினார். விழாவில் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

  1. ↩︎
RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!