Monday, June 16, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல் மாவட்ட பாமகவில் குழப்பம் - டாக்டர் ச.ராமதாசு, அன்புமணி ராமதாசு மாறி மாறி நிர்வாகிகளை...

நாமக்கல் மாவட்ட பாமகவில் குழப்பம் – டாக்டர் ச.ராமதாசு, அன்புமணி ராமதாசு மாறி மாறி நிர்வாகிகளை நியமனம் செய்து வருவதால் தொண்டர்கள் குழப்பம்

நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஒ.பி.பொன்னுசாமி செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் மாவட்டச் செயலாளரும், ராசிபுரம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஆ.மோகன்ராஜூ மீண்டும் மாவட்ட செயலாளராக நியமனம் செய்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.ராமதாசு அறிவித்துள்ளார். இதே போல் மாவட்டத் தலைவராக பொன்.முருகேசன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக ஜி.திருப்பதி ஆகியோரையும் டாக்டர் ச.ராமதாசு நியமித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒ.பி.பொன்னுசாமி மாவட்டச் செயலாளராக தொடர்வார் என அறிக்கை வெளியிட்டுள்ளார். டாக்டர் ச.ராமதாசும், டாக்டர் அன்புமணி ராமதாசும் ஒரே நாளில் நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இவர்களது உட்கட்சி சண்டையை சொந்த கட்சியினர், கூட்டணி ஆதரவு கட்சியினர் மட்டுமின்றி, ஆளும்கட்சியினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!