ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் நாமக்கல் மாவட்ட அதிமுக புரட்சித் தலைவி பேரவை சார்பில் கடந்த அதிமுக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தெருமுனை பிரச்சாரம், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் இ.ஆர்.சந்திரன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்று நகரில் பிரசுரங்கள் வழங்கினர்.
அதிமுக ஆட்சிகாலத்தில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலதிட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகள் போன்றவற்றை நினைவூட்டும் வகையிலான துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் காமராஜர் சிலை, அண்ணா சிலை, தங்கசாலை, பாவடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், வணிக நிறுவனங்களில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் கே.பி.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஏ.வி.பி.முரளிபாலுசாமி, மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலர் ஆர்.பிரகாசம் அதிமுக பேரூர் செயலர் எஸ்.என்.கே.பி.செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.