ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மற்றும் ஹைடெக் மெட்ரிக் பள்ளியின் மாணவ மாணவியர்கள் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியின் மாணவி ஆர்.பி. சுபிக்சா 600 க்கு 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


இம்மாணவி இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் 100 -க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் .எஸ் ஆர் வி ஆண்கள் பள்ளி மாணவர் எஸ்.கே.விஜய் ஸ்ரீராம் 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். வேதியியல் மற்றும் கணிதத்தில் இவர் 100-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோல் மாணவி எம். கோபிகா 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடத்தில் இவர் 100 -100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் . மாணவர் எஸ் .அபிநிவாஸ் 600க்கு 590 மதிப்பெண்களும் வேதியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இப்பள்ளியில் 590க்கு மேல் நான்கு மாணவ மாணவியர்களும், 580க்கு மேல் 13 மாணவ மாணவியர்களும் 570க்கு மேல் 34 மாணவிகளும், 560க்கு மேல் 65 மாணவ மாணவியர்களும், 550க்கு மேல் 87 மாணவ மாணவியர்களும், 500க்கு மேல் 219 மாணவியர்களும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளியின் தலைவர் எம்.குமரவேல், செயலாளர் பி.சுவாமிநாதன், பொருளாளர் எஸ்.செல்வராசன் , மேனேஜிங் டிரஸ்டி ஏ.ஆர். துரைசாமி, துணைத்தலைவர் ஏ.ராமசாமி, இணைச் செயலாளர் பி.சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் ப.வள்ளியம்மாள், தலைமை ஆசிரியர் பி.செந்தில், உதவி தலைமையாசிரியர் சுனில் குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.