Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்குமாரபாளையம் பகுதியில் தொடரும் சட்டவிரோத செயல்கள்…. வெளி மாநில லாட்டரி டிக்கெட்- அதிகவிலைக்கு மதுபானம் விற்ற...

குமாரபாளையம் பகுதியில் தொடரும் சட்டவிரோத செயல்கள்…. வெளி மாநில லாட்டரி டிக்கெட்- அதிகவிலைக்கு மதுபானம் விற்ற 5 பேர் கைது

குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பழைய காவேரி பாலம், கம்பன் நகர் ஆகிய பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற சிங்காரவேல்,(58), விஷ்ணு,(22)ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 25 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்தனர்.

இதே போல் குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் சேலம் சாலை துளிர் தாபா அருகில் அதிக விலைக்கு மது விற்பதாக தகவல் அறிந்து, அங்கு சென்று அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்த மிதுன்குமார் (29,) கோவிந்தசாமி (51), சவுந்தரராஜன் (20), ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!