Tuesday, May 20, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்தென்னையில் பூச்சி தாக்குதல் தமிழக விவசாயிகள் பாதிப்பு- மத்திய அரசு வல்லுனர்களை அனுப்பி ஆய்வு செய்து...

தென்னையில் பூச்சி தாக்குதல் தமிழக விவசாயிகள் பாதிப்பு- மத்திய அரசு வல்லுனர்களை அனுப்பி ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமக்கல் எம்பி., V.S. மாதேஸ்வரன் வலியுறுத்தல்

நாமக்கல் எம்பி., V.S.மாதேஸ்வரன் மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகம் நாட்டிலேயே தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் தற்போது தென்னை பல்வேறு விதமான நோய் தாக்குதல் ஆளாகியுள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் வெள்ளை மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளதால் அந்த பூச்சியிலிருந்து வரும் ஒரு விதமான திரவம் தென்னை மரங்களில் பல்வேறு இடங்களில் பரவி அந்த மரங்கள் பசுமை இழந்து காணப்படுகிறது. இதனால் தேங்காய் உற்பத்தியில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் தென்னை விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சிவப்பு கூன் வண்டுகள் காரணமாக மரங்கள் காய்ந்து அடியோடு சாய்ந்து வருகிறது
எனவே இதை கட்டுப்படுத்த உடனடியாக மத்திய தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளை அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல பெங்களூரில் உள்ள மத்திய பூச்சிகள் துறை ஆராய்ச்சி விஞ்ஞானிகளையும் அனுப்பி இங்குள்ள நிலைமையை சரி செய்ய வேண்டும். அதேபோல மத்திய அரசின் ஆராய்ச்சி குழுவை அனுப்பி தென்னையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!