உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதி, மோகனூர் ஒன்றியம், ஆண்டாபுரம் ஊராட்சி, வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ICICI FOUNDATION சமூக பொறுப்பு திட்டம் (CSR) மூலம் நடைபெற்ற 9000 மரக்கன்றுகள் நடப்பட்டு பஞ்சாயத்து ஒப்படைப்பு விழா மற்றும் ஆண்டாபுரம் சின்னப்பத்தம்பட்டி பஞ்சாயத்துகளுக்கு மின்கல வண்டி வழங்கும் நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு VS.மாதேஸ்வரன் MP அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் ராஜேஸ்வரி, நவராஜா, சதீஷ்குமார், உங்களுடைய மக்கள் தேசிய கட்சி நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், கிளை பொறுப்பாளர் முருகேசன், குமாரசாமி, சரவணன், சதீஷ், வெற்றிவேல், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.