Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா

ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா

ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை தொடர்ந்து தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மகாசிவராத்திரியை முன்னிட்டு சாமி ஊஞ்சல் ஆடுதல், பூபந்தல், பூமாலை அலங்கரிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் குண்டம் பற்றவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கணம் கட்டி, சக்தி கரகம் வந்து தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் பக்தர்கள் பூ மிதித்தல் திருவிழாவில் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!