நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 20.01.2025 முதல் 24.01.2025 வரை ஐந்து நாட்கள் சிறப்பு பயிற்சியாக ” காளான் வளர்ப்பு தொழில் தொடங்க உள்ள பட்டியலின் நபர்களுக்கு 5 நாட்கள் கானான் வளர்ப்பு இலவச பயிற்சி தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவத்தில் நிதியுதவியுடன் இப்பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் இலாபம் தரும் காளான் வளர்ப்பு முறைகள், விதை உற்பத்தி காளானின் வகைகள், காளான் வளர்க்கப்படும்போது ஏற்படும் இடர்பாடுகளும் தீர்வுகளும், காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் மற்றும் விற்பனை முறைகள் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. காளான வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும் மேலும் காளான வளர்ப்பு உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். மேலும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களும், பயிற்சி கையேடும் மற்றும் பயணப்படியும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டியலின் விவசாயிகள் பட்டியலின பண்ணை மகளிர்கள், பட்டியலின் விவசாய ஊரக இளைஞர்கள், படித்து முடித்து வேலையில்லாத பட்டியலின மாணவ மாணவிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள் ஊரக மகளிர், தொழில் தொடங்குபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பட்டியலினத்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ள தொடர்புக்கு 04286-266345, 266650, 9943008802, 959746373 மற்றும் 7010580683 என்ற தொலைபேசி எண்களை அணுகவும். இப்பயிற்சியில் நாமக்கல் மாவட்ட பட்டியலினத்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வரும் 40 நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். ஆகையால் உடனே மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரில் அணுகி 17.01.2025ம் தேதிக்குள் முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும் மேலும் பயிற்சிக்கு வரும் பட்டியலினத்தவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
தொடர்புக்கு:
முனைவர் க. வேல்முருகன்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
நாமக்கல் – 637 002