Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ரயில்வே அமைச்சருடன் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி., சந்திப்பு

ரயில்வே அமைச்சருடன் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பி., சந்திப்பு

பல்வேறு ரயில்வே திட்டங்கள் அமைக்க கோரிக்கை

டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது மாண்புமிகு

மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை நாமக்கல் எம்பி., VS.மாதேஸ்வரன் MP டெல்லியில் நேரில் சந்தித்து தூறந்தோ ரயில் நாமக்கல்லில் நிற்க உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கை மனு அளித்தும் பேசினார்.

  1. சேலம் – எக்மோர் இடையே இயக்கப்படும் ரயிலை நாமக்கல், மோகனூர் வழியாக கரூர் வரை நீட்டிக்க வேண்டும்.
  2. பாலக்காடு – ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில் கரூர், மோகனூர், நாமக்கல் வழியாக சேலம் வரை நீடிக்க வேண்டும்.
  3. சென்னை சென்ட்ரல் – கோவை இடையே இயக்கப்படும் ரயிலை சங்ககிரியில் நிறுத்த வேண்டும்.
  4. நூற்றாண்டு விழா கொண்டாடும் சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கும் கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் அளித்தார். 1924 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!