நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி பழனியப்பர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் உற்பத்தி தடுப்பு நடவடிக்கையாக பழனியப்பர் கோவில் மலைப்பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் எஸ்பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் தலைமையில் மலைப்பகுதிக்கு ஒற்றையடி பாதையில் நடந்து சென்று சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிங்களாந்தபுரம் பகுதியில் பொதுமக்களுக்கான குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், சேலம் டிஐஜி உமா, நாமக்கல் எஸ்பி ச.ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பேசினர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து இலவச சேவை எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இந்த கூட்டத்தில் ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார்,பேளுக்குறித்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கொல்லிமலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராய வேட்டை
RELATED ARTICLES