சுதந்திர போராட்ட கால வீரரும் தியாகியுமான டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு 138-வது பிறந்த தினவிழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் கொண்டாடப்பட்டது.

சுதந்திர போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலுநாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைச்சென்றவர். சிறந்த தொழிற்சங்கவாதி, சிறந்த பத்திரிகையாளர். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலப் பத்திரிக்கையை துவங்கி பொதுமக்களிடம் சுதந்திர போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிக்கையாளர். மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியார், முத்துராமலிங்கத்தேவர், ராஜாஜி, பெரியார், சத்தியமூர்த்தி, காமராஜர், போன்ற தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்தவர். சென்னை மாகாண சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பிறந்த தினவிழா சொந்த ஊரான ராசிபுரம் நகரில் நடைபெற்றது. விடுதலைகளம் அமைப்பு, ராசிபுரம் வட்ட நாயுடு நண்பர்கள் குழு சார்பில் இந்த விழா நடைபெற்றது.

விழாவில் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன், தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட நாயுடுகள் சங்கத் தலைவர் வேங்கடசுப்பிரமணியன், ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர், ராசிபுரம் நாயுடுகள் சங்கத் தலைவர் சிட்டி வரதராஜன், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது சிறப்புகள், போராட்ட வரலாறு குறித்துப் பேசினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், வரதராஜூலு நாயுடு தனது சொந்த ஊரான ராசிபுரத்தில் அரசு கல்லூரி அமைக்க பல ஏக்கர் நிலம் தானமாக கொடுத்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும், முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், நாமக்கல் மாவட்ட நாயுடுகள் சங்க இளைஞரணி தலைவர் சக்திவெங்கடேஷ், துணைத் தலைவர் பிரவீன்காந்த், செயலர் சதீஸ்குமார், பொருளாளர் வெங்கடாஜலம், மணமாலை கோவிந்தராஜ், முத்துக்காப்பட்டி செல்வராஜ், அன்பழகன், ராசிபுரம் நாயுடுகள் சங்க துணைத் தலைவர் ஜி.தினகரன், நிர்வாகிகள் எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.சீனிவாசன், பி.சக்திவேல், யோகராஜன், சபரி, விடுதலைக் களம் கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளர் துரை சரவணன், மாநிலப் பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், பெரியூர் பூபதி, திமுக மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஆர்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.