நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்நிலையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் சுமார் 60 வயது முதியவர் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் வந்த தீயணைப்பு நிலைய மீட்பு படையினர், வடிகாலில் இறங்கி, சடலத்தை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதத்தை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் சடலம் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத முதியவர் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வடிகாலில் விழுந்து பலி
RELATED ARTICLES