ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவுப் பொருளில் கலப்படம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராசிபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் வ.கோகுல் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) க.விஜயன், பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி, உணவு பாதுகாப்பு துறை இளநிலை பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் எளிய சோதனைகள் மூலம் உணவுப் பொருளில் உள்ள கலப்படங்களை கண்டறிதல் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உணவு பொருள்கள், எண்ணெய் வித்துக்கள், திண்பண்டங்களில் எப்படி கலப்படமின்றி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விளக்கிக்கூறப்பட்டது. மேலும் மாணவர்கள் தாங்களாகவே கலப்படத்தை எளிதாக கண்டறியும் வகையில் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பேபிலதா (பொறுப்பு) உள்ளிட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
ராசிபுரம் உணவுப் பொருள் கலப்படம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
RELATED ARTICLES