நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16/06/2025 முதல் 29/06/2025 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

காலை 09.00 மணி முதல் 02.00 மணி வரை நடைபெறும் முகாமினை தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகாம் நாட்களில் எடப்பாடி, குமாரபாளையம் பள்ளிப்பாளையம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல்,பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் மருத்துவமனை செல்வதற்கு காலை 08.00 மணியளவில் இலவச பேருந்து வசதியும் உள்ளது. மேற்கொண்டு தொடர்புக்கு : தமிழ் (PRO) – 73050 73143.