Tuesday, October 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்முன்னாள் முதல்வர் கருணாநிதி 7ம் ஆண்டு நினைவுதின அமைதி பேரணி: மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அழைப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதி 7ம் ஆண்டு நினைவுதின அமைதி பேரணி: மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அழைப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நாமக்கல்லில் ஆக.7-ல் நடைபெறுகிறது. இதில், கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்’ என, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு நாளில், அவரை போற்றும் வகையில், நாளை (ஆக., 7) காலை, 8 மணி அளவில், நாமக்கல் – மோகனுார் சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையில் இருந்து, பரமத்தி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வரை, அமைதி பேரணி நடக்கிறது.

தொடர்ந்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாநகர உறுப்பினர்கள், கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து வேண்டும் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!