நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் பெண் தலைமை காவலர் செல்வியின் நேர்மையை ராசிபுரம் ஒட்டுநர்கள் சார்பில் பாராட்டிகெளரவிக்கப்பட்டார். ராசிபுரம் பழைய பஸ் நிலையம் ராசி ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் எஸ்.ஆர்.சீனிவாசன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பாக தலைமை காவலர் செல்வி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம்.விஜயகுமார், காவல் துணை ஆய்வாளர் கீதாலட்சுமி ,போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், மற்றும் காவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் பெண் தலைமை காவலுருக்கு ஆட்டோ ஒட்டுநர்கள் பாராட்டு
RELATED ARTICLES