Sunday, June 8, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரத்தில் கிரிக்கெட் போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா

ராசிபுரத்தில் கிரிக்கெட் போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா

ராசிபுரம் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரெட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாமாண்டு கிரிக்கெட் போட்டிகள் எஸ்ஆர்வி பெண்கள் பள்ளி முன்பாக உள்ள மைதானத்தில் இரு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டிகளில் சில்வர் ஸ்டார் கிரிக்கெட் குழு தலைவர் சக்திவேல் தலைமையிலான அணி முதலிடத்தில் வெற்றி பெற்று கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு ரூ.25155 வென்றனர். நியூ ஸ்டார் கிரிக்கெட் குழு தலைவர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் 2-ம் இடத்தில் வென்று ரூ.20155 ரொக்கப்பரிசினை பெற்றனர். ஆர்.புதுப்பாளையம் இளம்புயல் கிரிக்கெட் குழு கேப்டன் கார்த்தி தலைமையிலான குழு 3-ம் இடத்தினை பெற்று ரூ.15155 ரொக்கம், மற்றும் கோப்பை பெற்றனர்.

நட்சத்திர இலைகள் குழுவின் கேப்டன் எழிலரசு தலைமையிலான குழு 4-ம் இடம் பெற்று ரூ.10155 ரொக்கம், கோப்பை பெற்றனர். சீலநாயக்கன்பட்டி ஒவியா ஆர்மி குழு கேப்டன் சேகர் தலைமையிலான குழு ரூ.5155 ரொக்கம், கோப்பை பெற்றனர். முன்னதாக நடைபெற்ற கிரிக்கெட் இறுதிப் போட்டியின் ராசிபுரம் மக்கள் நலக்குழுத் தலைவர் நல்வினை செல்வன் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிமுக சசிகலா அணி மாவட்ட பொறுப்பாளர் என்.கோபால் தலைமை வகித்தார். மக்கள் நலக் குழுவின் பொருளாளர் கா. முருகன், குட்டி என்கிற இருசப்பன், முனியப்பன், ஞானசேகரன், தினேஷ்குமார், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரிசு கோப்பைகளை மக்கள் நலக்குழு தலைவர் வி.பாலு, விக்கி பெய்ன்ட்ஸ் எஸ்.கனகராஜ், ஹார்ஸ் ஏ.விஜய், குட்டி என்கிற இருசப்பன் ஆகியோர் வழங்கினர்.

இந்த தொடர் கிரிக்கெட் போட்டிகளை கட்டனாச்சம்பட்டி நியூ சிவப்பு நட்சத்திர கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள் பூபதி, மணிகண்டன் , கந்தசாமி,ரவி, குமார், இருசப்பன், ரகுநாதன், சக்திவேல்,ராஜா, கவின், மௌலித் , சஞ்சய், தளபதி, மிதுன் தேவா வினோத்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!