Thursday, June 5, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல்லில் கலைஞர் கருணாநிதி பிறந்த தினம் - திருஉருவ படத்திற்கு மரியாதை - கட்சியின் முன்னோடிகளுக்கு...

நாமக்கல்லில் கலைஞர் கருணாநிதி பிறந்த தினம் – திருஉருவ படத்திற்கு மரியாதை – கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாமக்கல் பரமத்தி சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி திருஉருவ சிலைக்கு மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா,எம்.பி., மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

கட்சியின் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமயைில், தமிழக அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி.ராமலிங்கம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலரும் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் கட்சியின் முன்னோடிகள் 120 பேருக்கு திருச்சி சிவா எம்பி., மாவட்ட திமுக சார்பில் பொற்கிழி கொடுத்து கெளரவித்தார். இதில் கட்சியின் மாநில தீர்மான குழு துணைத் தலைவர் பார்.இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் Dr.மாயவன், மாநகர மேயர் D.கலாநிதி, நாமக்கல் கிழக்கு நகர செயலாளரும், துணை மேருமான செ.பூபதி, தெற்கு நகர செயலாளர் ராணா.ஆனந்த், மேற்கு நகர செயலாளர் A.சிவக்குமார், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் நாசர்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் நகரில் கருணாநிதி பிறந்த தினம்

ராசிபுரம்,ஜூன்.3: ராசிபுரம் நகரில் திமுகவினர் சார்பில் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் என் .ஆர் .சங்கர் தலைமை வகித்தார். அப்பகுதியில் அலங்கரித்து வைக்கட்டிருந்த கருணாநிதி திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர வார்டு திமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக இளைஞரணியினர் என பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!