நாமக்கல் JCIன் இணை அமைப்பான ஜேகாம் லைவ் நாமக்கல் 1.0 எனும் வணிகம் சார்ந்த அமைப்பின் 171வது கற்றல் வாரக்கூட்டம் இன்று கோல்டன் பேலஸ் ஹோட்டலில் அதன் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியாளர் ஆல்ஃபா ரவி, துணை தலைவர் அமிர்தலட்சுமி, செயலாளர் ஹேமலதா, பொருளாளர் மெய்யழகன், இயக்குனர்கள் முரளிதரன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், வணிகர் சங்கங்களின் அவசியம் குறித்தும் பேசிய அவர், அனைத்து வணிகர்களும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வணிகர்கள் அவரவர் தொழில் சார்ந்த சங்கங்களில் தங்களை இணைந்துக் கொண்டு பாதுகாப்புடன் வணிகத்தை தொடரவும் வேண்டுகோள் விடுத்தார்.
கெளரவ விருந்தினராக கலந்துகொண்ட எம்.எம் மருத்துவமையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் சிவக்குமார் உடல் நலம் குறித்தும் உடல் எலும்புகளை உறுதியாக வைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஜேகாம் உறுப்பினர்கள் அவரவர் நிறுவனங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.