Sunday, June 1, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்வங்கியில் நகை கடன் செலுத்தி திரும்ப பெறுவோருக்கு பழைய முறையிலேயே வட்டி பெற்று நகையை புதுப்பிக்கும்...

வங்கியில் நகை கடன் செலுத்தி திரும்ப பெறுவோருக்கு பழைய முறையிலேயே வட்டி பெற்று நகையை புதுப்பிக்கும் முறையை பின்பற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நாமக்கல் எம்பி., VS.மாதேஸ்வரன்

தங்க நகை மற்றும் நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்குவதில் காணப்படும் முறைகள் குறித்து செப்டம்பர் மாதம் சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ளது. அதாவது அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் படி தங்க நகைகளை அடகு வைத்தால் பொதுவாக தங்கள் கடன் தொகையை முழுமையாக கட்டி நகையை திருப்ப முடியவில்லை என்றால் வட்டித்தொகையை மட்டும் செலுத்தி மறு அடகு வைப்பதை வழக்கமாக பலர் வைத்துள்ளனர். இதனால் நகைக்கடன் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அதிக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படாது. ஆனால் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு சில முக்கியமான சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பின் படி நகைக்கடனை பொறுத்த வரையில் ஓராண்டு முடிவில் நகையை திருப்பி கொள்ள வேண்டும். மேலும் திருப்பிய நகையை அதே தேதியில் மறுகடன் வைக்க முடியாது. ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் தான் மீண்டும் புதிய நகைக்கடனை தொடங்க முடியும். இந்த அறிவிப்பால் விவசாயிகள், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் ரிசர்வ் வங்கியில் இந்த நடைமுறையை மாற்றி பழைய முறையே பின்பற்ற ஆவண செய்யுமாறு தொகுதி மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!