நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மசம்வர்த்தனி அம்பாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் சுவாமி திருவிதி உலா நடைபெற்று வருகிறது.
இதில் சாமி மயில் வாகனம், பூத வாகனம், சிம்ம வாகனம் ,ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ,புஷ்பரதம் உள்ளிட்ட அலங்காரத்தில் திருவீதி உலா முக்கிய வீதி வழியாக சென்று வந்தது.
இந்நிலையில் புதன்கிழமை சப்தாபரணம் சாமி சிறப்பு அலங்காரம் அபிஷேக பூஜைகள் கவரை தெரு கௌரவ பலிஜவார் நாயுடுகள் சமூகம் சார்பில் சிறப்பாக நடைபெற்று பின்னர் சந்திரசேகர் சிவகாமி அம்மாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதி வழியாக திருவீதி உலா சென்றது.
முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.