Sunday, June 1, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் - ரோட்டரி சங்கம் - இன்னர்வீல் கிளப் சார்பில்...

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம் – ரோட்டரி சங்கம் – இன்னர்வீல் கிளப் சார்பில் ஆசிரியர்களுக்கான தன்னார்வப் பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர் வீல் சங்கமும் ஆகியன இணைந்து ‘வடிவாக்கச் சிந்தனை’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தன்னார்வப் பயிற்சி முகாமினை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

பயிற்சியின் துவக்கவிழாவில் நாமக்கல் ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர் ஏ. சிவபெருமான் வரவேற்றார். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். முருகானந்தம் தலைமை வகித்தார்.

கவிக்குயில் பாவலர் செ. பேச்சியம்மாள் எழுதிய ஒளவையாரின் ஆத்திச்சூடி அறநெறிக் கதைகள் என்ற நூலை ராசிபுரம் ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் எஸ். அனந்தகுமார் வெளியிட 2025 -26 ஆம் ஆண்டு செயலாளர் மஸ்தான் பெற்றுக் கொண்டார். ஆசிரியர்களுக்கு ‘டிசைன் திங்கிங்’ என்ற பயிற்சி நூலை டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், மூத்த உறுப்பினர் வெங்கடாசலபதி ஆகியோர் வெளியிட்டனர். ரோட்டரி மகிழ்ச்சிப் பள்ளிகள் தலைவர் கே எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் ,ரோட்டரி உதவிஆளுநர் கே.பாரதி, ராசிபுரம் இன்னர் வீல் சங்க தலைவர் சுதா மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பேசினர். முடிவில் இராசிபுரம் ரோட்டரி சங்க செயலர் கே.ராமசாமி நன்றி கூறினார்.

வடிவாக்கச் சிந்தனைக் குறித்தப் பயிற்சியை நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மு. செல்வம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார்.

பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்றவும், வகுப்பறைச் செயல்பாடுகளில் எதிர்ப்பார்ப்புகளை நடைமுறைப்படுத்தவும், மாணவர்களின் ஊக்கம் மற்றும் உந்துதல்களுக்கு செயல்பாடுகளை அமைக்கவும் ஆசிரியர்களுக்கு வடிவாக்கச் சிந்தனை பெரியளவில் உதவும் எனவும், மேலும் ஆசிரியர்கள் தங்களையும், கற்பித்தல் திறன்களையும், ஆசிரியர் ,பள்ளிமாணவர்கள் என்ற உறவை மேம்படுத்தவும் வடிவாக்கச் சிந்தனை உதவும் என முதல்வர் மு. செல்வம் கூறினார்.

வடிவாக்கச் சிந்தனையின் கூறுகளான அனுதாபம், வரையறை, யோசனைகள், முன்மாதிரி உருவாக்கம் மற்றும் சோதித்து மதிப்பீடு செய்தல் போன்றவற்றைப் பணிச்சூழலில் பயன்படுத்துவது குறித்து வெற்றிக்கதைகள் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி பட்டறையில் ராசிபுரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சிட்டி வரதராஜன், நடராஜன், நமச்சிவாயம், ராசிபுரம் இன்னர் வீல் சங்க செயலாளர் சிவலீலஜோதி, பானு மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!