ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவியர்கள் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பள்ளி மாணவி டி.கே.பிரணிகா 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியான இவரது மதிப்பெண்கள்: பொருளியல் – 100, ஆங்கிலம் 98, கணக்குப்பதிவியல் 95, வணிகவியல் 95 , கணினி அறிவியல் 99.
மாணவி எஸ்.கோபிகாஸ்ரீ 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது பாடவாரி மதிப்பெண்கள்: ஆங்கிலம் 97 ,கணிதம் 89, இயற்பியல் 95, வேதியியல் 95 ,உயிரியல் 95. கே. சுதர்ஷனா 464 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரின் பாடவாரி மதிப்பெண்: ஆங்கிலம் 95, கணிதம் 89, இயற்பியல் 86, வேதியியல் 95, உயிரியல் 99.
பள்ளியில் 500-க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 15 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றள்ளனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் சார்பாக இனிப்பு, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மோகன்குமார், பள்ளியின் கல்வி இயக்குனர் சுப்ரமணியம், செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.