Monday, June 2, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

நாமக்கல்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 2024-25ல், கல்வியாண்டில் மே மாதம் 31 தேதியில் பணி நிறைவு பெறும் 48 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் எஸ். லோகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கே. செந்தில்செல்வன் வரவேற்றார். முன்னிலை வகித்த மாவட்ட பொருளாளர் பி. கண்ணன், மாவட்ட அமைப்புச் செயலாளர் எஸ். ராஜீ, மாவட்ட மகளிர் அணி செயலாளர் எஸ் சிவநந்தினி, சிறப்புரை நிகழ்த்திய முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் முனைவர் சி. அரங்கராசு, வாழ்த்துரை வழங்கிய மாநில பொருளாளர் எஸ். மலர்க்கண்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் எஸ். சுபத்ரா, மாவட்ட துணைத்தலைவர் இரா. சேகர், மாநில ஆலோசகத் தலைவர் பெ. இளங்கோவன், பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள், 48 பேருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அவர்கள் ஏற்புரையாற்றினர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் எஸ். ஆறுமுகம் நன்றி கூறினார். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!