மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி., முனைவர் ஆராய்ச்சிப் படிப்பு மற்றும் உயர் படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் கீழ்காணும் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள் https://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி 31.05.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.